கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மறுநாள் காலை 10.30 11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை நடைபெறும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை ஒட்டி நாளை ஆன்லைன் முன்பதிவு 64,900 ஆகவும் 27-ம் தேதி 70,000 ஆகவும் உள்ளது, மண்டல பூஜையை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நாளை மதியம் பம்பை வந்து சேரும், சபரிமலையில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மறுநாள் காலை மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்: தேவசம்போர்டு appeared first on Dinakaran.